Tamil Cricket News

Tamil Cricket News

Share

Cricket News in Tamil

Photos from Tamil Cricket News's post 08/11/2025

ஆறு வருடங்களின் பின் பாகிஸ்தான் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி!

23/10/2025

லங்கா பிரீமியர் லீக் (LPL) ஒத்திவைக்கப்பட்டது ஏன்?

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று (22) வெளியிட்ட அறிக்கையின் மூலம், இந்த ஆண்டு நடைபெறவிருந்த லங்கா பிரீமியர் லீக் (LPL) T20 – 2025 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

2026 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், இலங்கை மற்றும் இந்தியா இணைந்து ஆண்கள் T20 உலகக் கோப்பை தொடரை நடத்த உள்ளன. இதனையடுத்து, அந்த உலகக் கோப்பைக்கான மைதானங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்புகளைத் தயார்படுத்தும் நோக்கில், 2025ஆம் ஆண்டுக்கான LPL தொடர் ஒத்திவைக்கப்பட்டதாக SLC தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. (ICC) வழங்கிய வழிகாட்டுதலின்படி, 20 அணிகள் பங்கேற்கும் உலகத் தொடரின் தேவைகளுக்கு ஏற்ப, அனைத்து மைதானங்களும் சிறப்பான நிலையில் இருக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, 2025 LPL தொடரை பொருத்தமான காலத்திற்குத் தள்ளி வைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பைக்கு முன்பாக மைதானத் தயாரிப்பில் முழு கவனம் செலுத்த முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

T20 உலகக் கோப்பைக்கான தயாரிப்பாக மேற்கொள்ளப்படவுள்ள மேம்பாட்டு பணிகளில் பின்வரும் அம்சங்கள் இடம்பெறும்:

பார்வையாளர்கள் அமர்விடங்களை மேம்படுத்தல் மற்றும் தரநிலையை உயர்த்தல்.

வீரர்களுக்கான உடைமாற்ற அறைகள் மற்றும் பயிற்சி வசதிகளை நவீனமயமாக்கல்.

சர்வதேச ஒளிபரப்பு உபகரணங்கள் மற்றும் அமைப்புகளை புதுப்பித்தல்.

ஊடக மையங்களின் உள்கட்டமைப்பை சர்வதேச தரத்திற்கு உயர்த்தல்.

பல்நாட்டு தொடர்களுக்கான மைதான தரநிலைகளை மேம்படுத்தல்.

இதனுடன், கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (RPICS) நடைபெற்று வரும் ஐ.சி.சி மகளிர் உலகக் கோப்பை ஆட்டங்களுக்காக புனரமைப்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மகளிர் உலகக் கோப்பை முடிந்தவுடன் T20 உலகக் கோப்பைக்கான மேம்பாட்டு பணிகள் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் SLC தெரிவித்துள்ளது.

Photos from Tamil Cricket News's post 21/10/2025

தீபாவளி கொண்டாடிய இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள்!

16/10/2025

ஜலஜ் சக்சேனாவின் சாதனைகள், முன்னாள் தேர்வாளர்களின் சிரிப்பு – இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிப்பு

திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சி டிராபி போட்டியில், கேரள அணிக்காக களமிறங்கிய ஜலஜ் சக்சேனாவின் பிரமாண்ட புள்ளிவிவரங்கள் நேரலையில் ஒளிபரப்பான போது, முன்னாள் இந்திய தேர்வாளர்கள் சேத்தன் சர்மா மற்றும் சலில் அங்கோலா சிரித்து விளையாடிய உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியதால், ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

📊 சக்சேனாவின் சாதனைகள்:

• 150 முதல் தரப் போட்டிகளில் 7060 ரன்கள், 484 விக்கெட்டுகள்
• ரஞ்சி டிராபி வரலாற்றில் 6000+ ரன்கள், 400+ விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர்
• கபில் தேவ், மதன் லால், ஜடேஜா ஆகியோருக்குப் பிறகு 7000+ ரன்கள், 450+ விக்கெட்டுகள் எடுத்த நான்காவது இந்தியர்

🎙️ நேரலையில் நடந்த சர்ச்சைக்குரிய உரையாடல்:

• அங்கோலா: “இவருக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை?”
• சேத்தன்: “நாம் இருவருமே முன்னாள் தேர்வாளர்கள்தான்…”
• அங்கோலா: “நீங்கள்தானே தலைவராக இருந்தீர்கள்!”
• சேத்தன்: “ஆமாம், அதனால் நம்மை நோக்கித்தான் விரல்கள் நீட்டப்படும்…”

இந்த உரையாடல், ஒரு சிறந்த ஆல்-ரவுண்டரின் வாய்ப்புகளை தவிர்த்ததைக் குறித்து எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல், சிரிப்புடன் நடந்ததைக் காட்டுகிறது. இது, 2020–2023 காலத்தில் தேர்வுக்குழுத் தலைவராக இருந்த சேத்தன் சர்மா மற்றும் 2023–2024 காலத்தில் உறுப்பினராக இருந்த அங்கோலா ஆகியோரின் தேர்வுத் தவறுகளை மீண்டும் வெளிக்கொணர்கிறது.

ரசிகர்கள் கொந்தளிப்பு:

• “சக்சேனாவை தேர்வு செய்யாததே ஒரு தவறு” என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள்
• “சிரிப்பால் மறைக்க முடியாத ஒரு வீரரின் வீணான வாழ்க்கை” என ரசிகர்கள் வேதனை
இந்த விவகாரம், உள்நாட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்தாலும் வாய்ப்பு கிடைக்காத வீரர்களின் நிலையைப் பற்றிய பெரிய கேள்விகளை எழுப்புகிறது. ஜலஜ் சக்சேனாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் பொறுப்பற்ற அணுகுமுறையை வெளிக்கொணர்கிறது.

13/10/2025

பாண்டியாவின் புதிய காதலி! யார் இந்த மஹீகா ஷர்மா?

மஹீகா ஷர்மா என்பது 24 வயதுடைய ஒரு மாடல் மற்றும் சமூக ஊடகத் தாக்கம் செலுத்தும் நபராகும். இந்தியாவின் முன்னணி ஃபேஷன் வடிவமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

2024 இந்திய ஃபேஷன் விருதுகளில் "புதிய தலைமுறை மாடல்" விருது பெற்ற மஹீகா, Elle போன்ற பிரபல பத்திரிகைகளால் "மாடல் ஆஃப் த சீசன்" எனவும் பாராட்டப்பட்டுள்ளார்.

மேலும், மஹீகா இசை வீடியோக்கள், குறும்படங்கள் மற்றும் பிரபல பிராண்டுகளான Tanishq, Vivo, Uniqlo ஆகியவற்றின் விளம்பரங்களில் பணியாற்றியுள்ளார்.

13/10/2025

புதிய காதலியோடு பிறந்தநாளைக் கொண்டாடிய ஹர்திக் பாண்டியா!

09/10/2025

விராட் கோலி, ரோகித் சர்மாவின் எதிர்காலம் என்ன? சுப்மன் கில் விளக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவை சாதாரண வீரராக மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா, விராட் கோலியின் எதிர்காலம் என்ன என்பது குறித்து சுப்மன் கில்லிடம் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கில் கூறியதாவது:-

ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுள்ளனர். அவர்களின் ரெக்கார்டை அவ்வளவு எளிதாக யாராலும் மேட்ச் செய்யவே முடியாது. ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் திறமை, அனுபவம் ஆகியவற்றுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு. தற்போதைய சூழலில் ரோகித் சர்மா, விராட் கோலி இருவரின் இந்திய அணியின் எதிர்கால திட்டத்தில் இருக்கின்றனர்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் உடனான நட்பு சிறப்பாக உள்ளது. இந்திய அணி வீரர்களை பாதுகாப்புடன் உணர வைப்பது எப்படி என்பது தொடர்பாக தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை தயார் செய்ய வேண்டும் என்பதை ஆலோசித்து வருகிறோம்.

என்று கில் கூறினார்.

07/10/2025

LPL 2025 date confirmed 🇱🇰📆

▪️From December 01 to December 23.
▪️Indian players join to the league.
▪️5 teams participate.
▪️24 days of nonstop action.

03/10/2025

2025 ம் ஆண்டுக்கான மகளிர் உலகக் கோப்பையில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தான் அணியை கொழும்பில் எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், போட்டியின் முடிவைத் தாண்டி ஒரு புதிய சர்ச்சை ஒன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. அது, போட்டிக்கு முன்னும் பின்னும் இரு அணி வீராங்கனைகளும் கை குலுக்குவார்களா, மாட்டார்களா என்பதுதான்.

சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆசிய கோப்பை தொடரில், பாகிஸ்தானுடனான போட்டிகளின்போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, கை குலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்தது. பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய அரசு மற்றும் கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது, இந்திய மகளிர் அணியும் அதே பாணியைப் பின்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலாளர் தேவ்ஜித் சைக்யா பேசும்போது, கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகளும் இந்தப் போட்டியின்போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆனால், கை குலுக்குதல் அல்லது வீராங்கனைகள் சகஜமாகப் பேசிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று கூறியுள்ளார். "அந்த விரோத நாட்டுடனான நமது உறவில் கடந்த ஒரு வாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கொழும்பில் நடக்கும் போட்டியில், கிரிக்கெட்டின் அனைத்து நெறிமுறைகளும் பின்பற்றப்படும். ஆனால், கை குலுக்குவார்களா, கட்டிப்பிடிப்பார்களா என்பதையெல்லாம் இந்த நேரத்தில் என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது" என்று அவர் கூறியிருப்பது இந்த விவகாரத்தின் தீவிரத்தை அதிகரித்து இருக்கிறது.

இதற்கிடையே, பிடிஐ செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த மற்றொரு பிசிசிஐ அதிகாரி, கை குலுக்குவதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். "பிசிசிஐ, மத்திய அரசின் நிலைப்பாட்டுடன் முழுமையாக உடன்படுகிறது. டாஸின் போது வழக்கமாக நடைபெறும் கை குலுக்கல், போட்டி நடுவருடன் புகைப்படம் எடுப்பது, போட்டியின் முடிவில் கை குலுக்கிக் கொள்வது என எதுவும் நடக்காது. ஆண்கள் அணி பின்பற்றிய அதே கொள்கைதான் மகளிர் அணிக்கும் பொருந்தும்," என்று அவர் கூறியுள்ளார். இந்தச் சூழலில், இந்திய அணி கை குலுக்கலைப் புறக்கணிக்கக் கூடும் என்பதை எதிர்பார்த்து, பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி தயாராகி வருவதாகத் தெரிகிறது. இதுகுறித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் தங்கள் அணி மேலாளர் ஹினா முனாவர் ஆலோசனை கேட்டிருப்பதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) விதிமுறைகளின்படி, கை குலுக்குவது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கம் மட்டுமே தவிர, கட்டாயமான விதி அல்ல. இதுகுறித்து பிசிசிஐயோ, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ ஐசிசியிடம் இதுவரை எந்தப் புகாரும் தெரிவிக்கவில்லை. இந்தச் சர்ச்சைகள் ஒருபுறம் அனலைக் கிளப்பிக் கொண்டிருக்க, இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மிகவும் நிதானமாகப் பதிலளித்துள்ளார்.

"கிரிக்கெட் வீரர்களாகிய நாங்கள், களத்தில் நடப்பதை மட்டுமே கட்டுப்படுத்த முடியும். எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களைப் பற்றி நாங்கள் சிந்திப்பதில்லை, அதைப் பற்றி ஓய்வறையில் விவாதிப்பதும் இல்லை. எங்கள் கவனம் முழுவதும் கிரிக்கெட்டின் மீது மட்டுமே உள்ளது," என்று கூறி, அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

19/09/2025
Want your business to be the top-listed Gym/sports Facility in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Colombo