ARV Loshan Sports Tamil

ARV Loshan Sports Tamil

Share

ARV Loshan Sports தமிழ்
சரியான, தெளிவான, விரைவான விளையாட்டுத் தகவல்கள் + காணொளிகள் தமிழில்

31/08/2026

Kumar Sangakkara on Test Cricket !
🏏 ❤️
Kumar Sangakkara Sri Lanka Cricket

31/08/2026

"என்னால் முடிந்த எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன்!" – கண்ணீருடன் விடைபெற்ற கால்பந்தின் 'கடவுள்': லியோனல் மெஸ்ஸி விட்டுச் சென்ற காவிய வரலாறு!

"என்னால் முடிந்த எல்லாவற்றையும் எனது நாட்டிற்காகக் கொடுத்துவிட்டேன்... இனி என்னிடம் கொடுப்பதற்கு எதுவும் இல்லை!" — இந்த ஒற்றை நெகிழ்ச்சியான வார்த்தைகளுடன் சர்வதேசக் கால்பந்து அரங்கில் இருந்து அதிகாரப்பூர்வமாக விடைபெற்றுள்ளார் அர்ஜென்டினாவின் விடிவெள்ளி லியோனல் மெஸ்ஸி.

2022 உலகக் கோப்பை, 2021 மற்றும் 2024 கோபா அமெரிக்கா கிண்ணங்களை அர்ஜென்டினாவிற்குப் பெற்றுத் தந்த நாயகனாக, 39 வயதில், தனக்கே உரிய கம்பீரத்துடனும் திருப்தியுடனும் அவர் தனது சர்வதேசப் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

அன்று உடைந்த இதயம்... தவறவிட்ட தருணம்!

ஆனால், இன்று உலகம் வியந்து போற்றும் இந்த வரலாற்றுச் சாதனைப் பயணம், 10 ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்க வேண்டியது என்பதை நினைத்துப் பார்க்கும்போது கால்பந்து ரசிகர்களின் நரம்புகளில் நடுக்கம் ஓடுகிறது.

2016 ஜூன் 26... நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானம். சிலிக்கு எதிரான கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டு அர்ஜென்டினா தோற்ற அந்த அதிர்ச்சி கணம், ஒரு தேசத்தின் இதயத்தையே உடைத்தது. 29ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய இரண்டே நாட்களில், 113 போட்டிகளில் விளையாடியிருந்த மெஸ்ஸி, தாங்க முடியாத வேதனையில் ஒரு முடிவை அறிவித்தார்:

"எனக்கு அர்ஜென்டினா அணியுடனான பயணம் இதோடு முடிந்துவிட்டது. என்னால் முடிந்தவரை முயற்சி செய்துவிட்டேன். சாம்பியனாக முடியவில்லையே என்ற வலி மட்டுமே எஞ்சுகிறது. இதுவே அனைவருக்கும் நல்லது."

2007, 2014, 2015, 2016 எனத் தொடர்ந்து நான்கு முக்கிய தொடர்களின் இறுதிப் போட்டிகளில் ஏற்பட்ட தோல்விகள், உலகக் கால்பந்தின் தலைசிறந்த வீரன் என்று போற்றப்பட்ட மெஸ்ஸியை மனதளவில் முற்றாக நிலைகுலையச் செய்திருந்தன.

தேசம் வீதியில் இறங்கிய தருணம்: !

மெஸ்ஸியின் அந்த அதிர்ச்சி அறிவிப்பு அர்ஜென்டினாவை உலுக்கியது. "அவருக்குத் தலைவனுக்குரிய ஆளுமை இல்லை" என்று மாரடோனா வரை விமர்சித்த அதே நாடே, மெஸ்ஸி இல்லாமல் தங்கள் கால்பந்து எதிர்காலம் இல்லை என்பதை உணர்ந்தது.

கால்பந்து உலகம் கண்டிராத வகையில், " " (எங்களை விட்டுப் போகாதே மெஸ்ஸி!) என்ற ஒற்றைக் முழக்கத்துடன் லட்சக்கணக்கான ரசிகர்கள் பூனஸ் அயர்ஸ் வீதிகளில் இறங்கி கண்ணீர் மல்கப் போராடினர்.

அர்ஜென்டினா அதிபர் மெஸ்ஸியைத் தொடர்புகொண்டு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்; பூனஸ் அயர்ஸ் மேயர் 24 மணி நேரத்திற்குள் மெஸ்ஸியின் வெண்கலச் சிலையைத் திறந்து வைத்து மீண்டு வருமாறு மன்றாடினார்.

ஒரு முடிவும்... 10 ஆண்டு கால சாம்ராஜ்யமும்!

அர்ஜென்டினா மக்கள் காட்டிய அந்த அளப்பரிய பேரன்பின் முன் மெஸ்ஸியின் பிடிவாதம் தளர்ந்தது. ஆறு வார கால அமைதிக்குப் பிறகு, "என் தாய்நாட்டின் மீதான பேரன்பிற்காக மீண்டும் வருகிறேன்" என அறிவித்தார். அந்த ஒரு முடிவுதான் உலகக் கால்பந்து வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது.

மறுபிரவேசத்திற்குப் பின் அர்ஜென்டினாவிற்காக மேலும் 94 போட்டிகளில் விளையாடி, 70 கோல்களை விளாசிய மெஸ்ஸி, 4 பிரதான சர்வதேசக் கிண்ணங்களை ஏந்தித் தன் தாய்நாட்டின் 36 ஆண்டுகால தாகத்தைத் தீர்த்தார்.

நடந்து முடிந்த 2026 உலகக் கிண்ணத்திலும் 8 கோல்களையும் 4 அசிஸ்ட்களையும் பதிவு செய்து, அர்ஜென்டினாவை மீண்டும் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். 10 ஆண்டுகளுக்கு முன் எந்த மெட்லைஃப் மைதானத்தில் கண்ணீருடன் "விலகுகிறேன்" என்று அறிவித்தாரோ, அதே மைதானத்தில் தன் காவியக் கதையின் இறுதி அத்தியாயத்தை எழுதி முடித்துள்ளார்.

207 சர்வதேசப் போட்டிகள், 125 கோல்கள் என அர்ஜென்டினாவின் உச்ச நட்சத்திரமாக விடைபெறும் மெஸ்ஸிக்கு, பூனஸ் அயர்ஸின் புகழ்பெற்ற ரிவர் பிளேட் மைதானத்தில் லட்சக்கணக்கான ரசிகர்களின் கரவொலிக்கு நடுவே ஒரு காவிய விடைபெறல் போட்டி காத்திருக்கிறது.

தோல்விகள் தந்த காயங்களை வெற்றிகளால் மருந்தாக்கி, கம்பீரமாய் மீண்டு வந்த லியோனல் மெஸ்ஸியின் இந்த 10 ஆண்டு கால காவியப் பயணம், விளையாட்டு உலகம் என்றென்றும் போற்றும் ஒரு அழியாத கதை!

ஆங்கில மூலம் : Andy Cryer
தமிழில் : ARV Loshan Sports Tamil

31/08/2026

T20 ஹீரோக்களை விட டெஸ்ட் நட்சத்திரங்களுக்கு உயரிய முக்கியத்துவம் அளிப்போம்! – குமார் சங்கக்கார முன்வைக்கும் அதிரடி யோசனைகள்

இலங்கை கிரிக்கெட் அணி சர்வதேச அரங்கில் அனைத்து வடிவங்களிலும் ஜொலிக்க வேண்டுமானால், டெஸ்ட் கிரிக்கெட்டில் பலமாக இருப்பது மிக அவசியம். ஆனால், இன்றைய வணிகமயமான கிரிக்கெட் சூழலில் டெஸ்ட் போட்டிகளின் எதிர்காலமும், அதில் மட்டுமே கவனம் செலுத்தும் வீரர்களின் வாழ்வாதாரமும் பெரும் கேள்விகுறியாகியுள்ளன என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

வருமானக் குறைவும் சமமற்ற அட்டவணையும்

டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அதிகரிக்க உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், தற்போதைய எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் (FTP) கீழ் அனைத்து நாடுகளுக்கும் சமமான டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதில்லை.

"உலகக் கிரிக்கெட்டில் முன்னணி 3 அல்லது 4 நாடுகளைத் தவிர, ஏனைய நாடுகளுக்கு டெஸ்ட் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவு. இந்திய, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் தொடர்களுக்கு இருக்கும் வணிக மதிப்பு ஏனைய நாடுகளுக்குக் கிடைப்பதில்லை. ஆப்கானிஸ்தான், அயர்லாந்து போன்ற நாடுகளுக்கு டெஸ்ட் அந்தஸ்து இருந்தும் ஆண்டிற்குச் சில போட்டிகளிலேயே விளையாடும் நிலை உள்ளது" எனச் சங்கக்கார சுட்டிக்காட்டினார்.

முன்பெல்லாம் குறைந்தபட்சம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்கள் நடத்தப்பட்ட நிலையில், இப்போது பல தொடர்கள் 2 போட்டிகளுடனும், சில சமயங்களில் ஒரேயொரு போட்டியுடனும் முடிந்துபோவது கவலையளிப்பதாக அவர் தெரிவித்தார்.

T20 நாயகர்களைத் தாண்டி டெஸ்ட் வீரர்களைக் கொண்டாடுவோம்!

டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடும் சிறப்புப் போட்டி வீரர்களின் (Test Specialists) எதிர்காலம் குறித்து கவலை வெளியிட்ட சங்கக்கார, அவர்களுக்குப் போதிய வாய்ப்புகள் கிடைக்காதபோது அவர்களது கிரிக்கெட் வாழ்க்கையே கேள்விக்குறியாகிறது என்றார்.

"T20 அல்லது ஒருநாள் போட்டிகளில் ஜொலிக்கும் நட்சத்திர வீரர்களுக்கு இணையாக — ஏன், அவசியமான தருணங்களில் அவர்களை விடவும் மேலாக — டெஸ்ட் போட்டிகளில் சாதனை படைக்கும் வீரர்களை நாம் உயர்த்திக் கொண்டாட வேண்டும். அவர்களைச் சுற்றி நேர்மறையான பிம்பங்களையும் கதைகளையும் (Stories) உருவாக்கி, தொடங்குவதற்கு முன்னரே போட்டிகளைச் சரியாகச் சந்தைப்படுத்த வேண்டும்" என அவர் வலியுறுத்தினார்.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் செய்ய வேண்டியது என்ன?

நிதி மறுபகிர்வு: T20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருமானத்தின் ஒரு பகுதியை, நிதி ரீதியாகச் சவாலாக இருக்கும் டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து நடத்துவதற்குப் பயன்படுத்த வேண்டும்.

FTP அட்டவணையில் அழுத்தம்: இலங்கை கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் பேரவையிலும் (ICC) ஏனைய நாடுகளுடனும் திறம்படப் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கை அணிக்குக் கூடுதல் டெஸ்ட் போட்டிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

டெஸ்ட் அரங்கில் தங்களை வலுவாகத் தக்கவைத்துக்கொள்ளும் அணிகளாலேயே, ஏனைய ஒருநாள் மற்றும் T20 வடிவங்களிலும் நீண்டகால வெற்றிகளைப் பெற முடியும் என்பதை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் நினைவில் கொள்ள வேண்டும் என்பதே சங்கக்காரவின் தெளிவான செய்தியாகும்.

31/08/2026

லியோனல் மெஸ்ஸி ஓய்வு !
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்லார் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரரான மெஸ்ஸி !

Leo Messi

🥺🇦🇷 MESSI RETIRES FROM THE ARGENTINA NATIONAL TEAM! 👑

After 20+ years wearing the Argentina shirt, Lionel Messi has announced his retirement from international football. 💔

👕 207 appearances
⚽ 125 goals
🅰️ 68 assists
🏆 2022 FIFA World Cup
🏆🏆 Copa América
🏆 Finalissima

Messi leaves as Argentina’s most-capped player and all-time leading scorer, having delivered unforgettable moments across six World Cups. 🇦🇷🐐

From the heartbreaks to the glory what a journey, what a legacy.🥺🙌

🇦🇷 Gracias por todo, Leo. 👑🐐

31/08/2026

ICC தடை - ஊழலை ஒழிக்க வேண்டாமா? RTIக்கு தயாராகும் SLC - இனி வெளிப்படை !!

31/08/2026

Sri Lanka Cricket - புது மாற்றமா ? தடுமாற்றமா ? Shanaka comeback ! புதுமுகங்கள் அறிமுகம் !!

30/08/2026

இரவு 10:10 -
நேரலையில் சந்திக்க நல்ல நேரமாக இருக்குமா?
நான் இன்று ஞாயிறு என்பதை மறக்கவில்லை.
எனவே விசேட, முக்கிய செய்திகள், அதிமுக்கியமாக SRI LANKA CRICKET பற்றிய பரபரப்பு செய்திகளுடன் சந்திக்கிறேன்.

YouTube Live

30/08/2026

🚨 தொடக்க 2027 மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நடத்தும் உரிமையை இழந்தது இலங்கை! 🇱🇰❌

நிர்வாக ரீதியான தொடர்ச்சியான நிச்சயமற்ற நிலை காரணமாக, தொடக்க ICC மகளிர் சாம்பியன்ஸ் டிராபி 2027 தொடரின் நடத்தும் உரிமையை இலங்கை இழந்துள்ளது. இதனையடுத்து, இந்தத் தொடரை வேறொரு நாட்டிற்கு மாற்ற ICC தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

🏏 ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த T20I தொடர் 2027 பெப்ரவரி 14 முதல் 28 வரை நடைபெறவிருந்தது.

முந்தைய SLC நிர்வாகத்தின் கீழ் இந்தத் தொடர் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து நிலைமை மாறியுள்ளது.

அரசாங்கத்தின் தலையீட்டுக்கு எதிராக தனது நிலைப்பாட்டைத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ICC, முழுமையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் சுயாதீனமான கிரிக்கெட் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

🇦🇺 அவுஸ்திரேலியா
🏴 இங்கிலாந்து
🇮🇳 இந்தியா
🇳🇿 நியூசிலாந்து
🇿🇦 தென்னாப்பிரிக்கா
🇱🇰 போட்டியை நடத்தவிருந்த நாடு – இலங்கை

இலங்கை கிரிக்கெட்டுக்கு இது ஒரு பெரிய பின்னடைவு! 😔🏏


28/08/2026

Draw அல்ல வெற்றி தான் ! இந்தியாவுக்கு ஏமாற்றம் ! Sonal Dinusha - மிகப்பெரும் நம்பிக்கை !

27/08/2026

இந்தியத் தொடரை இலங்கை இழந்திருக்கலாம்; ஆனால், எதிர்காலத்திற்கான ஒளிக்கீற்று கிடைத்துவிட்டது!

இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 1-0 எனக் கைவிட்டிருக்கலாம். ஆனால், வெளிப்படையாகச் சொன்னால் இந்தத் தொடர் இலங்கை கிரிக்கெட்டுக்கு முற்றிலும் ஏமாற்றமானது அல்ல. மாறாக, இளம்படை காட்டிய வீரியம் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

குசல் மெண்டிஸ், பதும் நிஸ்ஸங்க ஆகிய முன்னணி வீரர்கள் காயத்தால் விலகிய நிலையில், சோனல் தினுஷ, பசிந்து சூரியபண்டார மற்றும் கேஷர நுவந்த போன்ற இளம் முகங்களுக்கு கதவுகள் திறந்தன.

சோனல் தினுஷ – இலங்கை கிரிக்கெட்டின் புதிய விடிவெள்ளி!

இந்தத் தொடரின் மிகப்பெரிய கண்டுபிடிப்பு சந்தேகமே இன்றி சோனல் தினுஷதான்.

இந்தியாவுக்கு எதிராக அவர் விளையாடிய 4 இன்னிங்ஸ்கள்:

100

84

103

133*

இந்திய பந்துவீச்சை எதிர்கொண்டு 4 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் மற்றும் ஒரு அரைசதம் விளாசுவது சாதாரண விஷயமல்ல. அணியின் விக்கெட்டுகள் சரிந்து அழுத்தத்தில் இருந்தபோதெல்லாம், அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடி ஓட்டங்களைக் குவித்தார். ஒரு சகலதுறை வீரராக அணிக்குள் வந்த சோனல், இனி முழுமையான துடுப்பாட்ட வீரராக மிளிரப்போவது உறுதி.
மூத்த வீரர்கள் திரும்பினாலும் சோனலின் இடம் இனி கேள்விக்குறியாகாது.

பூஜ்ஜியத்தில் தொடங்கி 92 வரை: பசிந்துவின் கம்பீரமான மீண்டெழுதல்!

காலி டெஸ்டில் மாற்று வீரராகக் களமிறங்கி டக்-அவுட் ஆன பசிந்து சூரியபண்டார, கொழும்பு டெஸ்டில் 80 மற்றும் 92 ஓட்டங்களைக் குவித்துத் தனது திறமையை நிரூபித்தார்.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதத்தை தவறவிட்டிருந்தாலும், சர்வதேச அரங்கில் நிலைத்து நிற்கும் பக்குவம் தன்னிடம் உள்ளது என்பதை வெளிப்படுத்தினார். ஒரு இன்னிங்ஸ் தோல்வியை வைத்து இளம் வீரர்களை எடைபோடாமல், பசிந்துவுக்குத் தொடர் வாய்ப்புகளை வழங்க வேண்டியது அவசியம்.

கேஷர நுவந்த – சகலதுறை வீரராக உருவாக்கலாமே?

வேகப்பந்து வீச்சாளரான கேஷர நுவந்த, காலி டெஸ்டில் பந்துவீச்சில் சற்று ஓட்டங்களை விட்டுக்கொடுத்தாலும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால், கொழும்பு டெஸ்டில் அவர் காட்டிய துடுப்பாட்டப் பொறுமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 150 பந்துகளை எதிர்கொண்டு அவர் கொடுத்த தற்காப்பு, மூத்த துடுப்பாட்ட வீரர்களுக்கே பாடம் புகட்டுவதாக இருந்தது. இலங்கை அணி அவரை ஒரு பந்துவீச்சு சகலதுறை வீரராக (Bowling All-rounder) வளர்த்தெடுக்க தீவிரமாக யோசிக்க வேண்டும்.

கடை நிலை வீரர்களின் போராட்டம்!

கொழும்பு டெஸ்டை இலங்கை ‘Draw’ செய்ய முக்கியக் காரணம் அணியின் கீழ்வரிசை துடுப்பாட்ட வீரர்கள்தான்.
சோனல் தினுஷவுக்கு மறுமுனையில் ஈடுகொடுத்து கேஷர நுவந்தவும் லஹிரு குமாரவும் காட்டிய பிடிவாதம், புள்ளிவிவரங்களில் பெரிதாகத் தெரியாவிட்டாலும், போட்டியின் முடிவை மாற்றியமைத்த முக்கிய தருணங்கள்.

இன்னமும் தீராத ஆரம்பத் துடுப்பாட்டப் பிரச்சினை!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகச் சதம் அடித்த லஹிரு உதார, இந்தியத் தொடரில் கடுமையாகத் திணறினார். தொடக்க ஜோடியின் பங்களிப்பு இல்லாதது இலங்கைக்கு மீண்டுமொரு பின்னடைவாக அமைந்தது. காமில் மிஷார போன்ற இளம் வீரர்களுக்கு ஓரிரு போட்டிகளோடு வாய்ப்பை மறுக்காமல், நிலையான வாய்ப்பளித்து வளர்த்தெடுக்க வேண்டும்.

மூத்த வீரர்களின் மந்தநிலை & பந்துவீச்சு!

3 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டு வந்த நிரோஷன் டிக்வெல்ல 80 ஓட்டங்கள் அடித்தாலும், அடுத்தடுத்த இன்னிங்ஸ்களில் சோபிக்க தவறினார். அணி நிர்வாகம் அஞ்சல பண்டார போன்ற அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பர்களை நோக்கி நகர வேண்டிய தருணம் இது.

அதேபோல், தலைவர் தனஞ்சய டி சில்வா துடுப்பாட்டத்திலும் சரி, களத்தடுப்பு அமைப்பிலும் சரி இன்னும் கூடுதல் தீவிரத்தைக் காட்டியிருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சில் அசித பெர்னாண்டோ மற்றும் லஹிரு குமார கூட்டணியின் வீரியம் நம்பிக்கையளித்தாலும், பிரபாத் ஜெயசூர்ய பந்துவீச்சில் இன்னும் துல்லியம் தேவைப்படுகிறது.

தொடர் தோல்வி... ஆனால் எதிர்காலம் பிரகாசம்!

காகிதத்தில் இந்தியா 1-0 என வென்றிருக்கலாம். ஆனால், இந்தத் தொடரின் மூலம் இலங்கை கிரிக்கெட் தனது அடுத்த தலைமுறை நாயகர்களைக் கண்டறிந்துள்ளது.

ஆரம்பத் துடுப்பாட்டம் மற்றும் தலைவரின் சில முடிவுகளில் கேள்விகள் இருந்தாலும், சோனல், பசிந்து, கேஷர போன்ற இளைஞர்களின் போராட்டம் இலங்கை கிரிக்கெட்டின் பாரம்பரியமிக்க வீரியத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. இந்த திறமைகளைச் சரியாகக் கையாண்டு, போதிய நம்பிக்கையும் வாய்ப்பும் அளிப்பதே தேர்வாளர்களின் தற்போதைய முக்கியக் கடமையாகும்.

Want your business to be the top-listed Gym/sports Facility in Colombo?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address


Colombo